ChangeSriLanka is a blog for community interventions which are mobilized by ADIC

பிரதேச உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களின் சமூக முன்மாதிரியான மனிதநேய செயற்பாடு.

பா. சிவநேசகுமர் மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் கரச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை
கரச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் 2017ம் ஆண்டு மார்கழி மாதத்தில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலின்படி எனது தலமையில் எங்களது பொதுசுகாதார பரிசோதகர்கள் குழு கரச்சி பிரதேசத்தில் உள்ள 196 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடி புகையிலை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனையை தவிர்த்துள்ளார்கள். புகைப் பொருட் பாவனையாளர்கள் புகைப்பிடிப்பதற்கான ஒரு இடமாக உணவு கையாளும் நிலையங்கள் பயன்படுத்துவதாகவும், இது புதிய பாவனையாளர்கள் உருவாகும் ஒரு இடமாகவும் இருப்பதாளாலும் இதiனை அறிந்து நாம் உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுடன் புகைத்தலால் ஏற்படக்கூடிய சுகாதார சமூக பாதிப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி அவர்களாகவே இந்த புகைப் பொருள் விற்பனையில் இருந்து விடுபட்டார்கள். இது இன்று எங்கள் பிரதேசத்திலுள்ளவர்களின் புகைப் பொருள் பாவனை குறைவடைவதற்கு ஓரு காரணமாக அமையும் என்பதில் எந்த ஜயமும் இல்லை.


Leave a reply:

Your email address will not be published.

Site Footer

Sliding Sidebar

ChangeSriLanka is a blog for community interventions which are mobilized by ADIC

You may not reproduce or communicate any of the content on this website, including photos, videos from this website, without the permission of the copyright owner.

© 2019 ChangeSriLanka. All Rights Reserved. Developed & Designed by Exclusivewebarts.com